Homeஅரசியல்அ.ம.மு.க எம்.எல்.ஏ காமராஜ் கடத்தப்பட்டாரா? பரபரப்பை கிளப்பிய குற்றச்சாட்டு - “அவரே வந்து கையெழுத்து போட்டார்”...

அ.ம.மு.க எம்.எல்.ஏ காமராஜ் கடத்தப்பட்டாரா? பரபரப்பை கிளப்பிய குற்றச்சாட்டு – “அவரே வந்து கையெழுத்து போட்டார்” என வீடியோ வெளியிட்ட த.வெ.க!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைக்கப்போவது யார் என்று ஒரு பக்கம் பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்.எல்.ஏ. காமராஜ் மாயமான விவகாரம் தமிழக அரசியலில் ஒரு பெரிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. தினகரன் கொடுத்த கடத்தல் புகார், அதற்கு தவெக கொடுத்த பதிலடி என, அரசியல் களம் அனல் பறக்கிறது.

டி.டி.வி தினகரன் முன்வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரான டி.டி.வி தினகரன், ஆளுநரைச் சந்தித்து ஒரு அதிரடி புகாரைக் கொடுத்தார். அவரது கட்சியின் மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜை திடீரென்று காணவில்லை என்றும், அவரை யாரோ மர்மமான முறையில் கடத்திட்டுப் போய் வச்சிருக்காங்கன்னும் பரபரப்பாக பேசினார்.

அது மட்டுமல்ல, “காமராஜரைத் தொடர்பு கொள்வதற்கு முடியவில்லை, இது கண்டிப்பாக ஒரு திட்டமிட்ட கடத்தல்” என்று ஆளுநரிடம் மனு கொடுத்தார் தினகரன். இதன் காரணமாக தமிழக அரசியலில் ஒரு நிமிஷம் எல்லாரும் அதிர்ச்சியடைந்தனர்.

குதிரை பேரம் புகாரும்… அந்த மர்மக் கடிதமும்!

இந்த விவகாரத்தில் டி.டி.வி. தினகரன் ஒரு முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்தார். அது குதிரை பேரம். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காமராஜ் பெயரில் ஒரு போலி கடிதத்தை ஆளுநரிடம் யாரோ கொடுத்துள்ளதாக தினகரன் கூறினார்.

ஒரு எம்.எல்.ஏ மிரட்சியால் கையெழுத்திட்ட ஒரு கடிதம் அல்லது போலி கடிதம் போல இருக்கலாம் என்று ஒருவர் கூறினார். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. மக்கள் அதிர்ச்சியடைந்தனர், ஏனெனில் ஒரு எம்.எல்.ஏ ஆதரவைப் பெறுவதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கூறுகின்றன.

தவெக வெளியிட்ட அதிரடி வீடியோ: என்ன நடந்தது?

தினகரன் கடத்தல் புகாரைச் சொன்ன சில மணி நேரத்தில், தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் இருந்து ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் எம்.எல்.ஏ காமராஜ் மிகவும் இயல்பாக வந்து, ஆதரவுக் கடிதத்தில் கையெழுத்துப் போடும் காட்சிகள் இருந்தன.

அவரை யாரும் கடத்தவில்லை அவரே விரும்பி தான் ஆதரவு தந்தார் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ இதை நிரூபிக்கவே வெளியிடப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் காமராஜ் ஒரு பேட்டியில், “அது என் கையெழுத்து அல்ல, நான் யாருக்கும் ஆதரவு தரமாட்டேன்” என்று கூறியது குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ஆளுநர் மாளிகையில் ஆஜரான காமராஜ்: முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

எதிர்பார்ப்புக்கு மாறாக, எம்.எல்.ஏ காமராஜ் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். இது அங்கு இருந்த பத்திரிகையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

ஆளுநரைச் சந்தித்து அவர் என்ன சொன்னார்? வீடியோவில் இருந்தாரா? இல்லையா? இந்தக் குதிரை பேரம் புகார்களுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள் தற்போது மக்கள் மத்தியில் இருக்கின்றன. எது எப்படியோ, ஒரு எம்.எல்.ஏ.-வைச் சுற்றி இவ்வளவு குழப்பங்கள் இருப்பதால் தமிழகமே இப்போ ஆச்சரியத்தில் இருக்கிறது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை